நண்பர் சங்கர் திருமணத்திற்காக நண்பர்களுடன் திருச்சி சென்று கொண்டிருக்கிறேன்.அரசுப் பேருந்தில் ரஜினிகாந்தின் 90 களின் ஹிட் பாடல்களுடன் இரவின் மடியில் பயணம்.பயணிகள் ஒவ்வொருவரும் தனித்த சாயல் கொண்டவர்களாக இருப்பது அதிசயமே.மழைத்தூறல் இரவுக்கு அழகு சேர்க்கிறது.மழையில் நனைந்த சாலை நீண்டு கிடக்கிறது.பேருந்தில் பயணிகள் குளிரோடு சிறிய யுத்தமே நடத்துகிறார்கள்.குளிரே வெல்கிறது.பேருந்தில் அதுவும் இரவுப் பயணம் வாழ்வில் வரம் என்பதை இந்தப் பயணம் மறுபடியும் நிரூபிக்கிறது.கிராமங்களும்,நகரங்களும் வியப்பை ஏற்படுத்தியபடியே கடக்கின்றன ஏதேதோ பழைய நினைவுகளைக் கிளறியபடி.வாழ்க்கை சுழற்றியடிப்பதில் பலவற்றை யாருக்கும் சொல்லாமலே கடக்கிறோம்.மனதில் பாரம் சற்றே அதிகரிப்பதோ,குறைவதோ நடக்கிறது...
No comments:
Post a Comment